ரஹானே 38 ரன்கள் மற்றும் ரிஷப் பந்த் 10 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தனர்

மழை காரணமாக முதல் நாள் ஆட்டம் 55 ஓவர்களிலேயே முடித்து வைக்கப்பட்டபோது, இந்தியா ஐந்து விக்கெட் இழப்புக்கு 122 ரன்கள் எடுத்திருந்தது.


ரஹானே 38 ரன்கள் மற்றும் ரிஷப் பந்த் 10 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தனர்.


முன்னதாக, ப்ரித்வி ஷா, புஜாரா ஆகியோர் முறையே 16 மற்றும் 11 ரன்களுக்கு ஆட்டமிழக்க, கேப்டன் விராட் கோலி வெறும் இரண்டு ரன்களுக்கு ஆட்டமிழந்தனர்.


நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி ஏற்கனவே ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும், மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடரிலும் விளையாடியுள்ளது.


டி20 தொடரை 5-0 என்ற கணக்கில் இந்தியா வெல்ல, ஒருநாள் போட்டித் தொடரை 3-0 என்ற கணக்கில் வென்று பழி தீர்த்தது நியூசிலாந்து அணி.